ஆயங்குடியில் இறுதி வேதம் உங்களை அழைக்கிறது…




கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 2 comments


கணினியை விரைவுபடுத்த - SpeedUpMyPC 2011



கணினியில் தினமும் பல்வேறு மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்களை பதிவிறக்கம் செய்வோம் பிடித்தால் பயன்படுத்துவோம் இல்லையெனில் கணினியிலிருந்து நீக்கி விடுவோம் இவ்வாறு கணினியில் இருந்து நீக்கம் செய்யும் போது மென்பொருள் முழுமையாக கணினியை விட்டு நீங்காது ஒரு சில பைல்கள் கணினியிலேயே தங்கிவிடும், மேலும் கணினியை பயன்படுத்தும் போது நாம் பயன்படுத்தும் மென்பொருள்கள் கணினியில் தேவையற்ற குப்பைகளை சேமிக்கும், அதுவும் கணினியிலேயே தங்கிவிடும். கணினியானது அடிக்கடி கிராஷ் ஆகினால் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் பைல்கள் சேதமாகும், இதுபோன்ற காரணங்களால் கணினியினுடைய செயல்பாட்டில் வேகம் குறையும். இதுபோன்ற நிலையில் கணினியில் உள்ள தேவையற்ற குப்பைகளை நீக்கினால் மட்டுமே கணினியானது மிக விரைவாக செயல்படும். இதுபோன்ற பைல்களை நீக்கி கணினியை சுத்தம் செய்ய வேண்டுமெனில் நாம் ஒரு மென்பொருளின் உதவியை கண்டிப்பாக நாடிச்செல்ல வேண்டும். இதற்கு மென்பொருள் உதவி செய்கிறது. அதுவும் தற்போது அந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.



மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
சுட்டி



கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடி மேலத்தெரு A.அமானுல்லாஹ் அவர்கள் மறைவு



ஆயங்குடி மேலத்தெரு A.அமானுல்லாஹ் (மனியார் வீடு) (B/O A.AbdulMalik,A.RajMohamed and  F/O A.ShahulHameedh,A.Ehsanullah,A.Ahamadullah)
அவர்கள்14.05.2011 அன்று மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆபாச இணையதளங்களை தடுக்க K9 Web Protection




இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள் நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து விளையாடுகிறான் ன்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும் வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல,

அவர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான் இணையதளம். இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும் நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம் அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில் சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம் இப்போது இருக்கிறோம்.K9 மென்பொருள் துணையுடன் எளிதாக நாமாகவே ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம் இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றி காண்போம். கண்டிப்பாக இந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

முதலில் http://www1.k9webprotection.com/ தளத்திற்கு செல்லுங்கள். அதில் உள்ள Free Download என்ற பட்டனை அழுத்துங்கள்.கீழே படத்தில் உள்ள பக்கம் திறக்கும்.
 

அதில் பெயர் சரியான இமெயில் முகவரியிவும். பிறகு Request Licence button ஐ அழுத்தவும். பிறகு உங்கள் இமெயிலுக்கு Download link மற்றும் Licence code அனுப்புவார்கள்.  Download link மூலம் மென்பொருளை பதிவிறக்கம் செய்து மென்பொருளை கணினியில் நிறுவவும். நிறுவும் பொழுது Licence code ஐ நிரப்பி உங்கள் ஞாபகமுள்ள பாஸ்வோர்டையும் பூர்த்தி செய்யவும். பிற்கு கணினியில் Start-Programmes-Blue coat k9 web protection-Blue coat k9 web protection admin ஐ அழுத்தவும். பிறகு உங்கள் பிரவுசர் திறந்து கீழுள்ள பக்கம் திறக்கும்.


அதில் Setup பகுதியை அழுத்தவும். உங்கள் பாஸ்வோர்டை இட்டால் setup பகுதி திறக்கும்.  அதில் உங்களுக்கு தேவையான மதிப்புகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அல்லது


படத்தில் உள்ள custom மதிப்பை தேர்ந்தெடுத்து அதில் Open Image/Media Search பகுதியை unselect செய்தால் ஆபாச தளங்கள் முடக்கப்பட்டு பிற தளங்களில் உள்ள வீடியோ,இமேஜ் திறக்கும்படி செய்து கொள்ளலாம்.
 


கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு கருணாநிதியை சந்தித்தார் பி,ஜே



முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
l
பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.
m
இது போதுமானதாக இல்லை என்று கருதியதால் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை யார் அதிகரித்து தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தோம்.
m
அ.தி.மு.க. தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என்றனர். எங்கள் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
m
ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.
k
அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்.
இவ்வாறு ஜெய்னுலாபுதீன் கூறினார்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 3 comments


மனித சக்தியால் இயங்கும் கார்..






HumanCar எனப்படும் மனித சக்தியால் இயங்கும் இந்த கார், ஒரே நேரத்தில் நான்கு பயணிகளை ஏத்திச் செல்ல முடியுமான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. சார்லஸ் க்ரீன்வூத் என்ற வடிவமைப்பாளர் இதை வடிவமைத்துள்ளார். பொதுவாக நாங்கள் சிறு குழந்தைகள் விளையாடும் ரிவின் கார் கண்டிருப்போம். அதுபோன்று கையால் அசைப்பதன் மூலம் ரிவின் செய்து இயங்கும் வகையில் இது அமைக்கப் பட்டுள்ளது. ஒருவர் மாத்திரம் இதை இயக்கி பயணம் செய்யினும், இலகுவாக நகரும் வகையில் இது அமைக்கப் பட்டிருப்பது இதன் சிறப்பமசமாகும். இதன் விலை சுமார் $15,500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 







கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடி கீழக்கடைத் தெரு அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) மறைவு



ஆயங்குடி கீழக்கடைத் தெரு N.B.அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் 08.03.2011 அன்று மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


காட்டுமன்னார் கோயில் (தனி) தொகுதி



வாக்காளர்க‌ள்:
மொத்த வாக்காளர்கள்:1,79,633
ஆண் வாக்காளர்கள்: 93,009
பெண் வாக்காளர்கள்:86,624
வாக்குச்சாவடிகள்: 212

தற்போதைய எம்.எல்.ஏ.:
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)

தொகுதி மறுசீர‌மைப்பு:
தொகுதி மறுசீரமைப்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

தொகுதி எல்லைக‌ள்:
காட்டுமன்னார் கோயில் தாலுக்கா
இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 11 முறை
தி.மு.க.: 5 முறை வெற்றி
காங்கிர‌ஸ்: 2 முறை வெற்றி
இந்திய‌ ம‌னித உரிமை க‌ட்சி: 2 முறை வெற்றி
காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை: 1 முறை வெற்றி
விடுத‌லைச் சிறுத்தைக‌ள்: 1 முறை வெற்றி
குறிப்புகள்:
* 1962ம் ஆண்டு தேர்தலில்தான் கட்டுமன்னார்கோயில் தொகுதி உருவானது.

* கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி.

* சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் காட்டுமன்னார்கோயில் ச‌ட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.

* கட்டுமன்னார்கோயில் தொகுதியில் தி.மு.க.தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.

* விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 தேர்தலில் முதன்முறையாக இங்கே வெற்றி பெற்றது.

* 1991 தேர்த‌லில் இந்திய‌ ம‌னித‌ உரிமை க‌ட்சி அ.தி.மு.க‌. ஆதர‌வுட‌ன் இர‌ட்டை இலை சின்ன‌த்தில் போட்டியிட்ட‌து.

* 2001 தேர்தலில் ப‌.சித‌ம்பர‌ம் தலைமையிலான‌ காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை தி.மு.க‌. கூட்ட‌ணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற‌து. அந்த‌ க‌ட்சியின் வேட்பாள‌ர் வ‌ள்ல‌ல்பெருமான் உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் வெற்றி பெற்றார்.

* 2006 தேர்த‌லில் அ.தி.மு.க‌. கூட்ட‌ணியில் போட்டியிட்ட‌ விடுத‌லைச் சிறுத்தைக‌ள் க‌ட்சியின் எழுத்தாள‌ர் ர‌விக்குமார் வெற்றி பெற்றார்.

வேட்பாள‌ர்க‌ள் ப‌யோடேட்டா:
2006 தேர்தல் முடிவு:
(விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி)
மொத்த‌ வாக்காள‌ர்க‌ள்: 1,52,743
ப‌திவான‌வை: 1,11,245
வாக்கு வித்தியாசம்: 13,414
வேட்பாளர்களின் எண்ணிக்கை: 8
வாக்குப்பதிவு சதவீதம்: 72.83
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்): 57,244
வள்ளல்பெருமான் (காங்கிரஸ்): 43,830
உமாநாத் (தே.மு.தி.க.): 6,556
செல்லக்கண்ணு (அகில இந்திய வள்ளலார் பேரவை): 902
வெற்றிக்குமார் (சுயேட்சை): 843
வசந்தகுமார் (பி.ஜே.பி.): 818

இதுவரை எம்.எல்.ஏ.கள்:
2006 ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)
2001 வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயக பேரவை)
1996 ராமலிங்கம் (தி.மு.க‌.)
1991 ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி)(அ.தி.மு.க‌. ஆத‌ர‌வு)
1989 தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி)
1984 ஜெயசந்திரன் (காங்கிரஸ்)
1980 ராமலிங்கம் (தி.மு.க‌.)
1977 ராமலிங்கம் (தி.மு.க‌.)
1971 பெருமாள் (தி.மு.க‌.)
1967 சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1962 கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க‌.)

க‌ட‌ந்த‌ கால‌ தேர்த‌ல் முடிவுக‌ள்:
2001 (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,59,810
பதிவானவை: 1,00,140
வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை): 55,444
சச்சிதானந்தம் (காங்கிரஸ்): 38,927
* காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை தி.மு.க‌.வின் உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிட்ட‌து.

1996 (தி.மு.க.வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,48,333
பதிவானவை: 1,07,391
ராமலிங்கம் (தி.மு.க.): 46,978
இளைய பெருமாள் (இந்திய மனித உரிமை கட்சி): 37,159

1991 (இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,36,540
பதிவானவை: 95,251
ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி): 48,103
வெற்றி வீரன் (பா.ம.க.): 21,785
* 1991 தேர்த‌லில் இந்திய‌ ம‌னித‌ உரிமை க‌ட்சி அ.தி.மு.க‌. ஆதர‌வுட‌ன் இர‌ட்டை இலை சின்ன‌த்தில் போட்டியிட்ட‌து.

1989 (இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,23,447
பதிவானவை: 79,791
தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி): 30,877
ராமலிங்கம் (தி.மு.க.): 27,036

1984 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,09,718
பதிவானவை: 87,442
ஜெயசந்திரன் (காங்கிரஸ்): 45,928
தங்கசாமி (தி.மு.க.): 41,796

1980 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,05,613
பதிவானவை: 74,916
ராமலிங்கம் (தி.மு.க.): 44,012
மகாலிங்கம் (சி.பி.எம்.): 29,350

1977 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,04,851
பதிவானவை: 70,200
ராமலிங்கம் (தி.மு.க.): 26,038
ராஜன் (அ.தி.மு.க.): 19,991

1971 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 83,360
பதிவானவை: 65,430
பெருமாள் (தி.மு.க.): 32,847
குப்புசாமி (ஸ்தாபன காங்கிரஸ்): 29,551

1967 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 79,560
பதிவானவை: 65,260
சிவ சுப்பிரமணியன் (காங்கிரஸ்): 30,521
கோவிந்தராசு (தி.மு.க.): 30,387

1962(தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 78,512
பதிவானவை: 61,027
கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.): 27,706
வகீசம் பிள்ளை (காங்கிரஸ்): 27,௫௯௯

நன்றி:http://electionvalaiyappan.blogspot.com/

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


O&O சாப்ட்வேர் நிறுவன இலவச மென்பொருள்-O&O Unerase 6



O&O Software
நாம் கணினியிலுள்ள கோப்புகள், போல்டர்களை அவசரப்பட்டோ, விபத்தாகவோ அழித்துவிடுவோம். அவை ரீசைக்கிள் பைனரியில் கிடைக்கவில்லையெனில் என்ன செய்வது? அதற்கு தேவை அழிந்த கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருட்கள்(Recovery software). அவ்வகையான மென்பொருளே இந்த் O&O அனெரேஸ். இதில் எளிதாக இழந்த கோப்பின் அளவு, பெயர், வகை ஆகியவற்றை தேடுபொறியில் கொடுத்து கோப்புகளை மீட்டெடுக்கலாம். $29.95 விலை மதிப்பு கொண்ட இந்த மென்பொருளை வீட்டு உபயோக கணினிகளுக்கு இலவசமாக தற்பொழுது வழங்குகின்றார்கள்.    
     



இலவச உரிமம் மற்றும் பதிவிறக்கும் வழிமுறை...

1.கீழுள்ள ப்ரோமோ பேஜ் என்ற சுட்டியில் உள்ள தளத்திற்கு சென்று உங்கள் பெயர்,மின்னஞல் முகவரியை பதிவு செய்யவும்.
 UnErase 6 Promo Page.
2. மென்பொருளுக்கான இலவச உரிம எண்கள் உங்கள் மின்னஞசலுக்கு அனுப்பப்படும்.
3. பதிவிறக்கம் O&O UnErase 6 (32-bit) / O&O UnErase 6 (64-bit)

ஆதரிக்கும் கணினி இயக்ககங்கள் : Windows 7, Server 2008 R2, Server 2008, Vista, Server 2003, XP, 2000 (32-bit & 64-bit).      






கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்



துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்.

http://uaeindians.org/registration.aspx

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன்!! இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) !! ஒரு வரலாற்று பார்வை!!



எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) அவர்கள், 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு நேற்றுடன் 63-வது வருடம் நிறைவுறுகிறது. எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும். நபியவர்கள் கூறினார்கள்; அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர் நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்"(அபூதாவூத்)

புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்ற போது, மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல், மார்ர்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டு வருதல் போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர்.(பத்ஹுல் பாரி). அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதர்கு விளக்கம் அளிக்கின்ற போது, மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்தல் என்றனர்.

இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது. அதன் இலக்கு என்ன? நபியவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும். அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது. 1928ம் ஆண்டு மார்ச் மாதம், நபியவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்; காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப் பணி ஆரம்பிக்கின்றது. நபியவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது, எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ அதேபோன்று, சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது. அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.

இந்த இயக்கம் ஸூஹைபுர்ரூமி போன்ற பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து நீங்கள் குறிப்பிடுவதுப் போன்று பலப் பிரச்சனைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி? நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் என்னச் செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா? என்றுக் கேட்டார்கள். அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள். அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் என்பது.

இந்த நிகழ்வு 1928ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் நடந்து முடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவக் காணப்படுகிறது. இன்னும் 21 வருடங்களில் 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப் பணி அதன் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற, அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.

இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா? இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப் போகிறது. அல்லாஹ்த்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக் கேளுங்கள்: "அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்."( அல்குர் ஆன்2:261)

இஸ்லாமிய தாஃவா என்பது, அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது. எழு நூறு மடங்கு விளைவைத் தரக்கூடியது. இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள். சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாவாவுக்காக செலவுச் செய்யும் நாணயங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப் பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.

எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில் 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக, தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம் தான் இருக்கப்போகிறது. அதற்கான பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

நன்றி:மீள்ப்பார்வை

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


அஷாம்பூ நிறுவன சட்டரீதியான 5 பயனுள்ள மென்பொருட்கள் இலவசம்






அஷாம்பூ வழங்கும் சட்டரீதி ஐந்து பயனுள்ள மென்பொருட்கள் தற்பொழுது இலவசம். அஷாம்பூ பர்னிங் ஸ்டுடியோ, ஹோம் டிசைனர், ஸ்நேப் 3, விண் ஆப்டிமைசர் 6, போட்டோ கமாண்டர் 7 ஆகிய பயனுள்ள ஐந்து மென்பொருட்கள் கீழுள்ள சுட்டியிலுள்ள தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 



கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இலவச சட்டரீதியான மென்பொருள்-Auslogics BoostSpeed 5 SE





Auslogics BoostSpeed 5 SE

RRP: 
£34.71
Save: £34.71 (100%)
Our Price: FREE
Download Size: 5.28 MB   

Download


ஆஸ்லாஜிஸ் பூஸ்ட் ஸ்பீட் 5 என்ற நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற கோப்புகளை சுத்தம் செய்யும் ஒரு அற்புதமான மென்பொருளாகும். இது டிஸ்க், தேவையற்ற இண்டெர்நெட் கோப்புகள்  மற்றும் ரெஜிஸ்டரியில் உள்ள தேவையற்ற கோப்புகளை சுத்தம் செய்வதுடன் டிஃப்ராக் மென்பொருளையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் ஸ்டார்ட் அப், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆட் ஆன்களையும் நிர்வகிக்கிறது.  v3 ஸ்டோரில் கணக்கைத் தொடங்கி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு இன்ஸ்டால் செய்யும் பொழுது கீழுள்ள ப்ரொமஷனல் கோடை உள்ளிடவும். இன்ஸ்டால் முடிந்தவுடன் மென்பொருளை திறக்கும் பொழுது மின்னஜ்சல் முகவரி கேட்கும். சரியான முகவரியிடடு உங்கள் மின்னஞ்சலில் மென்பொருளுக்கான கீ பெற்றுக்கொள்ளலாம்.

During installation, Auslogics BoostSpeed 5 SE will ask for a promotional code: INCISIVE0810




கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்



சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர்  கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி  தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


கலீஃபா உமர் வரலாற்றை தமிழில் மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாடமி விருது



தூரநாடு ஹனீப் என்பவர், மலையாளத்தில்  உமர் கலீபாவின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு நாவல் வடிவில் எழுதிப் பிரபலம் பெற்றிருந்தார். அந்த  நாவலை "செங்கோல் இல்லாமல், கிரீடம் இல்லாமல்' என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருந்தார் நிர்மால்யா (பரிசுத்தம்)  என்னும் ஒரு புதுமுகத் தமிழ் எழுத்தாளர் . அதற்காக அந்த மொழி பெயர்ப்பாளருக்கு  சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமுக எழுத்தாளர் நிர்மால்யாவின் இயற்பெயர் மணி என்பதாகும். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.  ஊட்டியில் எழுதுபொருள் விற்பனை கடை வைத்திருக்கும் மணியின் சிந்தையில் எழுதுபொருளாக முஸ்லிம்களின் இரண்டாம் கலீபாவுடைய வாழ்க்கை இடம்பிடித்தது வியப்பிற்குரியதே.

மணி என்கிற எழுத்தாளர் நிமால்யா இதுவரை 11 மலையாள நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார்.

நீலகிரியைச் சேர்ந்த ஓர் இலக்கியவாதிக்கு சாகித்ய விருது கிடைப்பது இதுவே முதன் முறை. நிர்மால்யா என்கிற மணி கூறுகையில், ""தேசிய அளவிலான இலக்கிய தளத்தில் எனது எழுத்துக்கும் அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி; கலை, இலக்கிய உணர்வு அற்றுப்போன நீலகிரி மண்ணில் இருக்கும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த விருது, இங்குள்ள இளைஞர்கள மத்தியில் இலக்கிய தாகத்தை ஏற்படுத்தினால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்,'' என்றார்.

நீலகிரிக்கு அடுத்துள்ள கோவையைச் சேர்ந்த கவிஞர்கள் புவியரசு, சிற்பி ஆகியோர் ஏற்கனவே, சிறந்த மொழி பெயர்ப்பு மற்றும் படைப்பிலக்கியங்களுக்காக தலா 2 முறை சாகித்ய அகாடமி  விருதுகளைப் பெற்றுள்ளனர்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இளம் வயது இந்தியரை ஈர்க்கும் இணையச் சூழல்




அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் இணையத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயரும் என்று இது குறித்து ஆய்வு நடாத்திய பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் இணைய பயனாளர்கள் எண்ணிக்கை 8.1 கோடியாக உள்ளது. இது 2015ஆம் ஆண்டில் 23.7 கோடியாக உயரும் என்று ‘இணையத்தின் புதிய 100 கோடி’ என்று தலைப்பில் ஆய்வு செய்த பாஸ்டன் கன்சல்டிங் குரூப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் பிரேசில், இரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.2 பில்லியனாக (1 பில்லியன் = 100 கோடி) உயரும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

“இந்த 4 நாடுகளிலும் இளம் வயதினர் மிக அதிகமாக இணையச் சூழலிற்கு ஈர்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டிற்கு 20 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

உலக நாடுகளில் தகவல் தொடர்பு அயல் பணிக்கு (Business Process Out-sourcing - BPO) மிகவும் உகந்த நாடாக இந்தியா உள்ளதென, இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட ஏடி கியர்னி நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2011இல் உலக சேவைகள் இட குறியீடு (Global Services Location Index - GSLI) என்ற ஆய்வை, கணினி அயல் பணி செய்யும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏடி கியர்னி நிறுவனம் நடத்தியுள்ளது. தனது ஆய்வில் கிடைத்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ள ஏடி கியர்னி நிறுவனம், “இந்தியாவே முதன்மை நாடாக உள்ளது. 

                       

அயல் பணித் தேவை எப்படிப்பட்டதாக இருப்பினும் அதற்குரிய பணியாளர் சக்தியை அளிக்கும் நாடாகத் திகழ்கிறது. வேகமான போக்குவரத்து வசதிகள்(!), ஆழமான திறன் உள்ளமை ஆகியவற்றால் உலக அளவில் அளிக்கப்படும் அயல் பணி வாய்ப்புகளை இந்தியா பெறுகிறது” என்று கூறியுள்ளது. 

உலக சேவைகள் இடக் குறியீட்டின் படி, இரண்டாவது இடத்திலுள்ள சீனாவை விட 0.5 புள்ளிகள் அதிகம் பெற்றும், மலேசியாவை விட 1 புள்ளி அதிகம் பெற்றும் முதலிடத்தில் இந்தியா உள்ளது என்று கூறியுள்ள ஏடி கியர்னி ஆய்வு, இந்தியா முதலிடத்தில் உள்ளதற்குக் காரணம் அதன் ஈடிணையற்ற திறன் கொண்ட பணியாளர்களும், பணியை நிறைவேற்ற ஆகும் குறைந்த செலவும் ஆகும் என்று கூறியுள்ளது. 

தகவல் தொழில் நுட்ப அயல் பணியில் உருவாகும் போட்டிகளை சமாளிக்கவும், அதனையும் தாண்டி தன்னை நிரூபிக்கவும், அத்துறையில் புதிதாக எழும் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் திறனும் இந்தியாவை அயல் பணித் துறையில் தலைமையிடத்தையும், மிகச் சிறந்த நாடாகவும் உயர்த்தியுள்ளது என்று கூறியுள்ளது. 

ஆங்கில மொழித் திறன் மட்டுமின்றி, அயல் பணியாற்ற உகந்த திறனைப் பெறக்கூடிய கல்வி நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான தகுதியுடைய பணியாளர்களை உருவாக்குவதும் இந்தியாவை இத்துறையில் தனித்த நாடாக முன்னிறுத்துகிறது என்று கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை, தாங்கள் அளிக்கும் சேவையில் தனி முத்திரை பதிக்கும் அளவிற்கு மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் இந்தியாவின் அயல் பணி நிறுவனங்கள் உள்ளதெனவும், அதில் இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியன முன்னணியில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

அயல் பணியில் உலகின் முதல் பத்து நாடுகளில் முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் மலேசியாவும், இந்தோனேஷியா 5வது இடத்திலும், தாய்லாந்து 7வது இடத்திலும் வியட்நாம் 8வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 9வது இடத்திலும் உள்ளன.

கால் செண்டர்களில் சீனா பெரிதாக பங்கு பெறவில்லை என்றாலும், அதிக திறன் தேவைப்படும் பகுப்பாய்வு, உயர் தகவல் தொழில் நுட்பப் பணிகளில் மேற்கத்திய நாடுகளுக்கு அது போட்டியாக வளர்ந்து வருகிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. 

நன்றி-தமிழ்




கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோ. அப்துல் ரஹ்மானுடன் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோர் இமயம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம்.



வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோ. அப்துல் ரஹ்மானுடன் தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஆகியோர் இமயம் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம்.


   

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 1 comments


எ-கலப்பை 3.0 – மென்பொருள் அறிமுகம்



 
‘தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது.
இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது.
இதுவரை கணினியில் ‘யுனிகோட்’ தமிழை உள்ளீடு செய்ய வேறு செயலிகளை பயன்படுத்திவந்தவர்கள் இதனைப்பயன்படுத்திப்பார்க்கலாம்.
இந்த செயலி பழைய ‘எ-கலைப்பை 1.0′ போன்று மூன்றாம் தரப்பு செயலியான ‘கீமேனை’ப்பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் ஒரு ‘திறந்தமூலநிரலி’ யின் துணையுடன் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பான அம்சம்.

இச்செயலி Tamil99 , Phonetic, Typewriter, Bamini, Inscript ஆகிய 5 விதமான விசைப்பலகைகளைக்கொண்டு யுனிகோட் தமிழை உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் விசைப்பலகையை மாற்றுவதற்கான விசைகளை உங்களுக்கு விருப்பமான தெரிவாக அமைத்துக்கொள்ளலாம்.  கீழேயிருக்கும் படங்கள் இவற்றை விளக்குகின்றன.
இதனை வடிவமைத்து வெளியிட்ட முகுந்த் மற்றும் அவரின் நண்பர்களின் அயராத உழைப்புக்குப் பாராட்டுக்கள்!
இதனைத்தரவிறக்க கீழேயிருக்கும் சுட்டியை அழுத்தவும். (5.19MB)



ஒரு சில விளக்கப்படங்கள் கீழே..


இப்பதிவு பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை “உங்கள் கருத்துக்கள்” பகுதியில் பதிவு செய்யுங்கள்!

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


எகிப்து எழுகிறது - இஸ்ரேல் அழுகிறது!



எகிப்தில் தொடராக எட்டாவது நாளாக இடம் பெற்று பேரணியால் தலைநகர் கெய்ரோ ஸ்தம்பித்தது. எனினும்அதிபர் ஹுஸ்னி முபாரக் பதவி விலக மறுத்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மக்களின்போராட்டம் நேற்றும் 8வது நாளாக நீடித்தது.  சுமார் 10 லட்சம் பேர் தலைநகர் கெய்ரோவை நோக்கி படை எடுத்திருந்தனர். ஹுஸ்னி முபாரக்கை எகிப்தை விட்டு வெளியேறும் படி அவர்கள் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தும் இராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் முபாரக் தயார் என அறிவித்தும், அதனை ஏற்றுக்கொள்ள யாரும் முனவரவில்லை.

இதேவேளை தனது சகாவான முபாரக்குக்கு ஆதரவு திரட்டி இஸ்ரேல் ஐப்ரோபிய நாடுகளில் தனது தூதரகங்கள் ஊடாக பிரசார நடவடிக்கைகளை தீவிரமாக்கும் படி அந்தந்த நாட்டிலுள்ள இஸ்ரேலர்களுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறது.

எகிப்தில் முபாரக்கின் வீழ்ச்சி பலஸ்தீனின் ஹமாஸை வலுவான சக்தியாக மாற்றும் என்று இஸ்ரேல் அச்சம் தெரிவித்திருக்கிறது.  அதேவேளை தான் வளர்த்த முபாரக்கை கைவிட்டது போல் நடிக்கும் அமெரிக்க சந்தேகத்திடமான ஒரு பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்திருக்கிறது. எகிப்து தொடர்பாக அமெரிக்காவின் அண்மைய நிலைப்பாடு மாறுபட்டிருக்கிறது. 

எகிப்தின் முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக எட்டாவது நாளையும் கடந்து வீரியத்துடன் நடந்து வரும் நிலையில், 
"எகிப்து மக்கள் அமெரிக்கா முபாரக்கிற்கு ஆதரவளிப்பதாக தவறாக நினைத்துள்ளனர். அமெரிக்கா ஹுஸ்னி முபாரக்கிற்கு ஆதரவளிக்கவில்லை" என அமெரிக்க செனட்டர் ஜோன் கெர்ரி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திடீரென நியாயத்தின் பக்கம், மக்கள் பக்கம் சாய்ந்தது போன்ற அதன் நிலைப்பாட்டில் விபரீதம் ஒன்று மறைந்திருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டையும் உணர முடிகின்றது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை  இஸ்ரேல் கடுமையாக சாடியுமுள்ளது. "முபாரக்கின் அரசு கவிழ்ந்தால் எகிப்தின் முஸ்லிம் சுசகோதரத்துவக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மோசமாகும். உலக நாடுகளுக்கும் பிரச்னை அதிகரிக்கும்" என இஸ்ரேல் அமைச்சர் அயூப்கரா அச்சம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த கலக்கத்தைப் பார்க்கும் போது மத்தியக்கிழக்கில் அதன் சண்டித்தனத்திற்கு துணை போனவர்களாக இந்த அரபுத் தலைவர்கள்   திகழ்ந்திருக்கின்றார்கள என்ற உண்மையை புரியக் கூடியதாக இருக்கிறது.

இதேவேளை Gulf Civil Society Forum (GCSF) என்ற அமைப்பு ஹுஸ்னி முபாரக்கிற்கு உதவி புரியும் அரபு தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளது.  தொடர்ந்தும் இத்தகைய அடக்கு முறையாளர்களுக்கு உதவி செய்வதை உடனடியாக நிறுத்தும் படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஜனவரி 27-2011 அன்று சென்னை & மதுரையை ஸ்தம்பிக்க வைத்த முஸ்லிம்கள்




விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என தங்களைத் தாங்களே கருதிக்கொள்ளும் உயர் நீதிமன்றங்கள் அநியாய தீர்ப்பு வழங்கினாலும் கண்டிக்க தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உரக்க சொல்லும் விதமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும் இலட்சக்கணக்கில் கலந்து கொண்ட பாபர் மஸ்ஜித் தீர்ப்பிற்கு எதிரான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) ஜனவரி 27-2011 அன்று நடத்திய சென்னை & மதுரை கண்டனப் பேரணி & ஆர்ப்பாட்டங்களின் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக....

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!



மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.
இதில் நாமும் விதிவிலக்கல்ல..
ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.
பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!

விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்
1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்
அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.
இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!!  இது மகாப் பொய்யாகும்!!
நாம் இதை  இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.
நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)
IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்
HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்
BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்
மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.
நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.
அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.
லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.
பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு  பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?
எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது
அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.
ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.
2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.
இது மிகப்பெரும் அநியாயமாகும்.
2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே  பெட்ரோலை லிட்டர்  54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.
எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்
உண்மையில்  தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.
ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.
இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011
வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்
22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.
ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..
மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.
இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!
இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!
மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.
நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.
இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!
100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.
ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு  வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.
இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.
எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூடுதலாக வரி விதிக்க காரணம்
1. தனியார் நிறுவனங்கள்
சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.
கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.
ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.
இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.
Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின்  லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.
இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.
தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.
இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.
முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.
2. வட்டி
65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.
இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.
அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.
பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.
அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.
18% எங்கே 65% எங்கே ?
பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்
மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.
இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை தான்  ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு ‘சொந்த இடம், சொந்த வீடு, படத்திற்கு வரி விலக்கு’ பொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.
இதுவல்லாமல் பொதுமக்களுக்கு ‘அந்த திட்டம் இந்த திட்டம்’ என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.
மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.
பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.
மாநிலம் வாரியான பெட்ரோல் வரி பட்டியல்
State oil Petrol Diesel Kerosene gas
Andhra Pradesh 4 33 22.2 4 4
Maharastra 4 25 23 4 -
Gujarat - 23 21 - -
Madhya Pradesh - 28.7 23 4 4
Chattisgarh - 22 22 4 -
Goa - 22 21 4 4
Uttar Pradesh 4 26.5 17.2 4 -
Uttarakhand - 25 21 12.5 -
Delhi - 20 12.5 4 4
Himachal Pradesh - 25 14 - 4
Jammu, Kashmir - 20 12 4 4
Punjab - 27.5 8.8 4 4
Rajasthan - 28 18 4 -
Haryana 4 20 8.8 4 -
Chandigarh - 20 12.5 4 2
Tamilnadu - 30 21.4 4 4
Pondicherry - 12.5 12.5 - 1
Kerala - 29 24.6 - -
Karnataka 1 25 18 4 1
Orissa - 18 18 4 4
Assam - 25.7 15.5 2 4
Bihar 2 16 16 8 8
Jharakhand - 20 14.5 4 4
West Bengal - 25 17 4 4
Manipur - 20 12.5 4 4
Meghalaya - 20 12.5 4 4
Tripura - 15 10 - 1.5
Mizoram - 18 10 - 2
Arunachal Pradesh - 20 12.5 4 4
nagaland - 20 12 5 4


State
oil
Petrol
Diesel
Kerosene
gas
Andhra Pradesh
4
33
22.2
4
4
Maharastra
4
25
23
4
-
Gujarat
-
23
21
-
-
Madhya Pradesh
-
28.7
23
4
4
Chattisgarh
-
22
22
4
-
Goa
-
22
21
4
4
Uttar Pradesh
4
26.5
17.2
4
-
Uttarakhand
-
25
21
12.5
-
Delhi
-
20
12.5
4
4
Himachal Pradesh
-
25
14
-
4
Jammu, Kashmir
-
20
12
4
4
Punjab
-
27.5
8.8
4
4
Rajasthan
-
28
18
4
-
Haryana
4
20
8.8
4
-
Chandigarh
-
20
12.5
4
2
Tamilnadu
-
30
21.4
4
4
Pondicherry
-
12.5
12.5
-
1
Kerala
-
29
24.6
-
-
Karnataka
1
25
18
4
1
Orissa
-
18
18
4
4
Assam
-
25.7
15.5
2
4
Bihar
2
16
16
8
8
Jharakhand
-
20
14.5
4
4
West Bengal
-
25
17
4
4
Manipur
-
20
12.5
4
4
Meghalaya
-
20
12.5
4
4
Tripura
-
15
10
-
1.5
Mizoram
-
18
10
-
2
Arunachal Pradesh
-
20
12.5
4
4
nagaland
-
20
12
5
4
போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.
விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.
இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.
மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.
மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.
பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!
அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்
20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!
ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.
சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!
இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.
இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..
அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.
எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.
எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.

நன்றி-www.tntj.net
www.Tntj.net இணையதள நேயர்களுக்காக..
பெட்ரோல் விலை பற்றிய சிறப்பு ஆய்வு
அபு நபீலா
(விலை உயர்வால் பாதிக்கப்பட்டவன்)
புள்ளி விபரத்தில் சற்று கூடுதல் குறைவு இருப்பதாக யாருக்கும் தெரியவந்தால் தெரியப்படுத்தவும்.
Ref: MoneyControl , Indian gov Tax website, Press News, indian budget

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info