தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு கருணாநிதியை சந்தித்தார் பி,ஜே



முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
l
பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.
m
இது போதுமானதாக இல்லை என்று கருதியதால் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை யார் அதிகரித்து தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தோம்.
m
அ.தி.மு.க. தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என்றனர். எங்கள் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
m
ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.
k
அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்.
இவ்வாறு ஜெய்னுலாபுதீன் கூறினார்.

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 3 comments


மனித சக்தியால் இயங்கும் கார்..






HumanCar எனப்படும் மனித சக்தியால் இயங்கும் இந்த கார், ஒரே நேரத்தில் நான்கு பயணிகளை ஏத்திச் செல்ல முடியுமான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. சார்லஸ் க்ரீன்வூத் என்ற வடிவமைப்பாளர் இதை வடிவமைத்துள்ளார். பொதுவாக நாங்கள் சிறு குழந்தைகள் விளையாடும் ரிவின் கார் கண்டிருப்போம். அதுபோன்று கையால் அசைப்பதன் மூலம் ரிவின் செய்து இயங்கும் வகையில் இது அமைக்கப் பட்டுள்ளது. ஒருவர் மாத்திரம் இதை இயக்கி பயணம் செய்யினும், இலகுவாக நகரும் வகையில் இது அமைக்கப் பட்டிருப்பது இதன் சிறப்பமசமாகும். இதன் விலை சுமார் $15,500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 







கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


ஆயங்குடி கீழக்கடைத் தெரு அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) மறைவு



ஆயங்குடி கீழக்கடைத் தெரு N.B.அப்துல் கப்பார்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் 08.03.2011 அன்று மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக. அனைவரும் அவரது மஃரபித்திற்காக பிரார்த்திப்போமாக....

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


காட்டுமன்னார் கோயில் (தனி) தொகுதி



வாக்காளர்க‌ள்:
மொத்த வாக்காளர்கள்:1,79,633
ஆண் வாக்காளர்கள்: 93,009
பெண் வாக்காளர்கள்:86,624
வாக்குச்சாவடிகள்: 212

தற்போதைய எம்.எல்.ஏ.:
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)

தொகுதி மறுசீர‌மைப்பு:
தொகுதி மறுசீரமைப்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

தொகுதி எல்லைக‌ள்:
காட்டுமன்னார் கோயில் தாலுக்கா
இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 11 முறை
தி.மு.க.: 5 முறை வெற்றி
காங்கிர‌ஸ்: 2 முறை வெற்றி
இந்திய‌ ம‌னித உரிமை க‌ட்சி: 2 முறை வெற்றி
காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை: 1 முறை வெற்றி
விடுத‌லைச் சிறுத்தைக‌ள்: 1 முறை வெற்றி
குறிப்புகள்:
* 1962ம் ஆண்டு தேர்தலில்தான் கட்டுமன்னார்கோயில் தொகுதி உருவானது.

* கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி.

* சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் காட்டுமன்னார்கோயில் ச‌ட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.

* கட்டுமன்னார்கோயில் தொகுதியில் தி.மு.க.தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.

* விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 தேர்தலில் முதன்முறையாக இங்கே வெற்றி பெற்றது.

* 1991 தேர்த‌லில் இந்திய‌ ம‌னித‌ உரிமை க‌ட்சி அ.தி.மு.க‌. ஆதர‌வுட‌ன் இர‌ட்டை இலை சின்ன‌த்தில் போட்டியிட்ட‌து.

* 2001 தேர்தலில் ப‌.சித‌ம்பர‌ம் தலைமையிலான‌ காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை தி.மு.க‌. கூட்ட‌ணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற‌து. அந்த‌ க‌ட்சியின் வேட்பாள‌ர் வ‌ள்ல‌ல்பெருமான் உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் வெற்றி பெற்றார்.

* 2006 தேர்த‌லில் அ.தி.மு.க‌. கூட்ட‌ணியில் போட்டியிட்ட‌ விடுத‌லைச் சிறுத்தைக‌ள் க‌ட்சியின் எழுத்தாள‌ர் ர‌விக்குமார் வெற்றி பெற்றார்.

வேட்பாள‌ர்க‌ள் ப‌யோடேட்டா:
2006 தேர்தல் முடிவு:
(விடுதலைச் சிறுத்தைகள் வெற்றி)
மொத்த‌ வாக்காள‌ர்க‌ள்: 1,52,743
ப‌திவான‌வை: 1,11,245
வாக்கு வித்தியாசம்: 13,414
வேட்பாளர்களின் எண்ணிக்கை: 8
வாக்குப்பதிவு சதவீதம்: 72.83
ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்): 57,244
வள்ளல்பெருமான் (காங்கிரஸ்): 43,830
உமாநாத் (தே.மு.தி.க.): 6,556
செல்லக்கண்ணு (அகில இந்திய வள்ளலார் பேரவை): 902
வெற்றிக்குமார் (சுயேட்சை): 843
வசந்தகுமார் (பி.ஜே.பி.): 818

இதுவரை எம்.எல்.ஏ.கள்:
2006 ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)
2001 வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயக பேரவை)
1996 ராமலிங்கம் (தி.மு.க‌.)
1991 ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி)(அ.தி.மு.க‌. ஆத‌ர‌வு)
1989 தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி)
1984 ஜெயசந்திரன் (காங்கிரஸ்)
1980 ராமலிங்கம் (தி.மு.க‌.)
1977 ராமலிங்கம் (தி.மு.க‌.)
1971 பெருமாள் (தி.மு.க‌.)
1967 சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1962 கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க‌.)

க‌ட‌ந்த‌ கால‌ தேர்த‌ல் முடிவுக‌ள்:
2001 (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,59,810
பதிவானவை: 1,00,140
வள்ளல்பெருமான் (காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை): 55,444
சச்சிதானந்தம் (காங்கிரஸ்): 38,927
* காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை தி.மு.க‌.வின் உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிட்ட‌து.

1996 (தி.மு.க.வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,48,333
பதிவானவை: 1,07,391
ராமலிங்கம் (தி.மு.க.): 46,978
இளைய பெருமாள் (இந்திய மனித உரிமை கட்சி): 37,159

1991 (இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,36,540
பதிவானவை: 95,251
ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி): 48,103
வெற்றி வீரன் (பா.ம.க.): 21,785
* 1991 தேர்த‌லில் இந்திய‌ ம‌னித‌ உரிமை க‌ட்சி அ.தி.மு.க‌. ஆதர‌வுட‌ன் இர‌ட்டை இலை சின்ன‌த்தில் போட்டியிட்ட‌து.

1989 (இந்திய மனிதஉரிமை கட்சி வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,23,447
பதிவானவை: 79,791
தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி): 30,877
ராமலிங்கம் (தி.மு.க.): 27,036

1984 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,09,718
பதிவானவை: 87,442
ஜெயசந்திரன் (காங்கிரஸ்): 45,928
தங்கசாமி (தி.மு.க.): 41,796

1980 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,05,613
பதிவானவை: 74,916
ராமலிங்கம் (தி.மு.க.): 44,012
மகாலிங்கம் (சி.பி.எம்.): 29,350

1977 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,04,851
பதிவானவை: 70,200
ராமலிங்கம் (தி.மு.க.): 26,038
ராஜன் (அ.தி.மு.க.): 19,991

1971 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 83,360
பதிவானவை: 65,430
பெருமாள் (தி.மு.க.): 32,847
குப்புசாமி (ஸ்தாபன காங்கிரஸ்): 29,551

1967 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 79,560
பதிவானவை: 65,260
சிவ சுப்பிரமணியன் (காங்கிரஸ்): 30,521
கோவிந்தராசு (தி.மு.க.): 30,387

1962(தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 78,512
பதிவானவை: 61,027
கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.): 27,706
வகீசம் பிள்ளை (காங்கிரஸ்): 27,௫௯௯

நன்றி:http://electionvalaiyappan.blogspot.com/

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


O&O சாப்ட்வேர் நிறுவன இலவச மென்பொருள்-O&O Unerase 6



O&O Software
நாம் கணினியிலுள்ள கோப்புகள், போல்டர்களை அவசரப்பட்டோ, விபத்தாகவோ அழித்துவிடுவோம். அவை ரீசைக்கிள் பைனரியில் கிடைக்கவில்லையெனில் என்ன செய்வது? அதற்கு தேவை அழிந்த கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருட்கள்(Recovery software). அவ்வகையான மென்பொருளே இந்த் O&O அனெரேஸ். இதில் எளிதாக இழந்த கோப்பின் அளவு, பெயர், வகை ஆகியவற்றை தேடுபொறியில் கொடுத்து கோப்புகளை மீட்டெடுக்கலாம். $29.95 விலை மதிப்பு கொண்ட இந்த மென்பொருளை வீட்டு உபயோக கணினிகளுக்கு இலவசமாக தற்பொழுது வழங்குகின்றார்கள்.    
     



இலவச உரிமம் மற்றும் பதிவிறக்கும் வழிமுறை...

1.கீழுள்ள ப்ரோமோ பேஜ் என்ற சுட்டியில் உள்ள தளத்திற்கு சென்று உங்கள் பெயர்,மின்னஞல் முகவரியை பதிவு செய்யவும்.
 UnErase 6 Promo Page.
2. மென்பொருளுக்கான இலவச உரிம எண்கள் உங்கள் மின்னஞசலுக்கு அனுப்பப்படும்.
3. பதிவிறக்கம் O&O UnErase 6 (32-bit) / O&O UnErase 6 (64-bit)

ஆதரிக்கும் கணினி இயக்ககங்கள் : Windows 7, Server 2008 R2, Server 2008, Vista, Server 2003, XP, 2000 (32-bit & 64-bit).      






கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கம்



துபை,மார்ச்.2:வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்.

http://uaeindians.org/registration.aspx

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


எகிப்தின் இஃவானுல் முஸ்லிமீன்!! இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) !! ஒரு வரலாற்று பார்வை!!



எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்…) அவர்கள், 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு நேற்றுடன் 63-வது வருடம் நிறைவுறுகிறது. எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும். நபியவர்கள் கூறினார்கள்; அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர் நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்"(அபூதாவூத்)

புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்ற போது, மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல், மார்ர்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டு வருதல் போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர்.(பத்ஹுல் பாரி). அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதர்கு விளக்கம் அளிக்கின்ற போது, மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்தல் என்றனர்.

இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது. அதன் இலக்கு என்ன? நபியவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும். அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது. 1928ம் ஆண்டு மார்ச் மாதம், நபியவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்; காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப் பணி ஆரம்பிக்கின்றது. நபியவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது, எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ அதேபோன்று, சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது. அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.

இந்த இயக்கம் ஸூஹைபுர்ரூமி போன்ற பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து நீங்கள் குறிப்பிடுவதுப் போன்று பலப் பிரச்சனைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி? நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் என்னச் செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா? என்றுக் கேட்டார்கள். அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள். அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் என்பது.

இந்த நிகழ்வு 1928ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் நடந்து முடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவக் காணப்படுகிறது. இன்னும் 21 வருடங்களில் 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப் பணி அதன் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற, அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.

இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா? இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப் போகிறது. அல்லாஹ்த்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக் கேளுங்கள்: "அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்."( அல்குர் ஆன்2:261)

இஸ்லாமிய தாஃவா என்பது, அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது. எழு நூறு மடங்கு விளைவைத் தரக்கூடியது. இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள். சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாவாவுக்காக செலவுச் செய்யும் நாணயங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப் பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.

எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில் 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக, தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம் தான் இருக்கப்போகிறது. அதற்கான பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.

நன்றி:மீள்ப்பார்வை

கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


அஷாம்பூ நிறுவன சட்டரீதியான 5 பயனுள்ள மென்பொருட்கள் இலவசம்






அஷாம்பூ வழங்கும் சட்டரீதி ஐந்து பயனுள்ள மென்பொருட்கள் தற்பொழுது இலவசம். அஷாம்பூ பர்னிங் ஸ்டுடியோ, ஹோம் டிசைனர், ஸ்நேப் 3, விண் ஆப்டிமைசர் 6, போட்டோ கமாண்டர் 7 ஆகிய பயனுள்ள ஐந்து மென்பொருட்கள் கீழுள்ள சுட்டியிலுள்ள தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 



கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


இலவச சட்டரீதியான மென்பொருள்-Auslogics BoostSpeed 5 SE





Auslogics BoostSpeed 5 SE

RRP: 
£34.71
Save: £34.71 (100%)
Our Price: FREE
Download Size: 5.28 MB   

Download


ஆஸ்லாஜிஸ் பூஸ்ட் ஸ்பீட் 5 என்ற நம் கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற கோப்புகளை சுத்தம் செய்யும் ஒரு அற்புதமான மென்பொருளாகும். இது டிஸ்க், தேவையற்ற இண்டெர்நெட் கோப்புகள்  மற்றும் ரெஜிஸ்டரியில் உள்ள தேவையற்ற கோப்புகளை சுத்தம் செய்வதுடன் டிஃப்ராக் மென்பொருளையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் ஸ்டார்ட் அப், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆட் ஆன்களையும் நிர்வகிக்கிறது.  v3 ஸ்டோரில் கணக்கைத் தொடங்கி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு இன்ஸ்டால் செய்யும் பொழுது கீழுள்ள ப்ரொமஷனல் கோடை உள்ளிடவும். இன்ஸ்டால் முடிந்தவுடன் மென்பொருளை திறக்கும் பொழுது மின்னஜ்சல் முகவரி கேட்கும். சரியான முகவரியிடடு உங்கள் மின்னஞ்சலில் மென்பொருளுக்கான கீ பெற்றுக்கொள்ளலாம்.

During installation, Auslogics BoostSpeed 5 SE will ask for a promotional code: INCISIVE0810




கண்டிப்பாக இங்கே ஓட்டளியுங்கள்

Share |


மேலும் படிக்க... உங்கள் கருத்தினை பதிய 0 comments


 

© 2010 ஆயங்குடி செய்திகள் All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info